Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
செயல்திறன் என்பது எப்போதுமே உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலும் வரவேண்டும் - உங்கள் செயல் இயந்திரத்தனமாக, அக்கறையின்றி இருக்கக்கூடாது.
உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் அபத்தத்தை விட, படைத்தவனின் உருவாக்கத்திற்கு அதிக கவனம் கொடுப்பது மிகவும் முக்கியமானது.
மறைஞானம் என்பது அதிசயங்கள் நிகழ்த்துவதைப் பற்றியதல்ல. மறைஞானம் என்பது ஐம்புலன்களால் உணரமுடியாத உயிரின் அதிசயத்தை ஆழமாக அறிந்துணர்வது.
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால், எங்கும் சாத்தியங்களையே பார்ப்பீர்கள். வாழ்க்கையை நீங்கள் ஒரு பிரச்சனையாகப் பார்த்தால், எங்கும் பிரச்சனைகளையே பார்ப்பீர்கள்.
உங்கள் எண்ணங்களை இந்த அண்டம் முழுவதையும் கருத்தில்கொண்டு பார்த்தால், அவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் எண்ண ஓட்டத்திலிருந்து இயல்பாகவே ஒரு இடைவெளியை உருவாக்குவீர்கள்.
நீங்கள் கவலைப்படும்போது இயங்குவதை விட, நீங்கள் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் இருக்கும்போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாக இயங்கும். உயிரின் முழுமை நிலைதான் ஆரோக்கியம்.
உங்கள் வாழ்க்கையில் குறிப்பாக கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருந்தால், நீங்கள் விவேகமானவராக மாறவேண்டும், காயப்பட்டவராக அல்ல.
ஒரு புத்திசாலிக்கு, தான் ஒரு முட்டாள் என்பது தெரியும், ஆனால் ஒரு முட்டாளுக்கோ, தான் ஒரு முட்டாள் என்பது தெரியாது.
அன்பென்பது ஒரு பரிவர்த்தனை அல்ல, அது உங்களுக்குள் எரியும் ஒரு தீச்சுடர். அது உங்கள் மையத்தையே எரிக்கும்போது, விடுதலையாக இருக்கிறது.
நேர்மை என்பது செயலைப் பற்றியது அல்ல, செயலின் நோக்கத்தைப் பற்றியது. நீங்கள் செய்வதை அனைவரது நல்வாழ்வுக்காகவும் செய்கிறீர்களா அல்லது உங்கள் சொந்த நலனுக்காக செய்கிறீர்களா என்பதுதான் கேள்வி.
இந்த மனதை உங்களுக்கு நீங்களே நல்வாழ்வை உருவாக்கவும் பயன்படுத்தலாம், அல்லது துயரத்தை உருவாக்கவும் பயன்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் இந்த தேர்வு இருக்கிறது.
மனிதர்கள் விழிப்புணர்வாக மாறினால், ஆதிக்கம் செலுத்தும் உணர்வும் மோதிக்கொள்ளும் உணர்வும் மறைந்துவிடும்.