Main Centers
International Centers
India
USA
Sadhguru Quotes
FILTERS:
SORT BY:
Clear All
உண்மை என்பது ஒளிந்திருக்கவில்லை - நீங்கள்தான் அதனிடமிருந்து ஒளிந்திருக்கிறீர்கள்.
நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள் என்ற கவனமின்றி இருப்பதுதான் மிகப்பெரிய அறியாமை.
அன்பு, ஆனந்தம் மற்றும் பரவசத்தின் கண்ணீர் உங்கள் கன்னங்களை நனைத்திராவிட்டால், வாழ்க்கையை நீங்கள் இன்னும் ருசிக்கவில்லை.
தியானலிங்கம், தெய்வீகத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. அதன் வளையத்திற்குள் வரும் எவரும் ஆன்ம விடுதலைக்கான விதை விதைக்கப்படுவதிலிருந்து தப்ப முடியாது.
ஒருவருடன் உங்கள் உறவு சிறக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அந்த இன்னொருவர் உங்களைவிட முக்கியமானவர் என்று இடைவிடாமல் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் சரியான முடிவு என்று எதுவுமில்லை, நீங்கள் ஒரு முடிவெடுத்து அதற்கு உங்களை முழுமையாகக் கொடுத்தால், அது அற்புதமாக முடியும்.
நோக்கம் என்பது ஒரு விஷயம், அதை செயல்படுத்துவது என்பது வேறு விஷயம். உங்கள் வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை செயல்படுத்துவீர்களா, அல்லது உங்களுக்கு நிகழும் அனைத்தையும் எதேச்சையாக நிகழ அனுமதிப்பீர்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
பிரபஞ்சம் என்பது ஒரே முழுமையான செயல்முறை. நீங்கள் அதிலிருந்து தனித்து நிகழவில்லை.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் சிரமப்பட்டு செய்வதாக இல்லாமல், அன்பு மற்றும் ஆனந்தத்துடன் செய்வதாக இருக்கட்டும்.
எவரையும் உயர்வாகவும் பார்க்கவேண்டாம், எவரையும் தாழ்வாகவும் பார்க்கவேண்டாம். அனைவரையும் நீங்கள் உள்ளபடியே பார்க்கும்போது, வாழ்க்கையினூடே நீங்கள் சிறப்பாக பயணிப்பீர்கள்.
அண்டத்தின் அளவில் நீங்கள் யார் என்பதை புரிந்துகொண்டால், நீங்கள் மென்மையாக வாழ்வீர்கள். நீங்கள் தொடுபவை யாவும் ஆசீர்வாதமாக மாறட்டும்.
பற்றற்ற நிலை என்றால் ஈடுபாடின்றி இருப்பதல்ல. நீங்கள் ஆழமான ஈடுபாட்டுடன் இருக்கும்போதும் சிக்கிப்போகாமல் இருக்கமுடியும்.