Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
நீங்கள் விரும்பும் விதமாக உங்களால் உங்களை உருவாக்கிக்கொள்ள முடிந்தால், உங்கள் விதியையும் நீங்கள் விரும்பும் விதமாக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
வசந்தத்தின் அழகே, கனி இன்னும் வரவில்லை என்றாலும், பூ அதற்கான வாக்குறுதியாகவும் வாய்ப்பாகவும் இருப்பதுதான்.
செயல்திறன் என்பது எப்போதுமே உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலும் வரவேண்டும் - உங்கள் செயல் இயந்திரத்தனமாக, அக்கறையின்றி இருக்கக்கூடாது.
தேவையான சக்தி இல்லாவிட்டால் விழிப்புணர்வாக இருப்பது மிகவும் கடினம். அதற்குத்தான் ஆன்மீக சாதனா அல்லது யோகப் பயிற்சிகள் - உயிர்சக்தியைத் தூண்டுவதற்கு.
பெரும்பாலான மனிதர்களிடத்தில் உணர்வுகள்தான் வலுவான சக்தியாக உள்ளது - தாங்கள் அறிவுப்பூர்வமானவர்கள் என்று நம்புபவர்களிடத்திலும் அப்படித்தான் இருக்கிறது.
உங்கள் எண்ணங்களை இந்த அண்டம் முழுவதையும் கருத்தில்கொண்டு பார்த்தால், அவற்றுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் எண்ண ஓட்டத்திலிருந்து இயல்பாகவே ஒரு இடைவெளியை உருவாக்குவீர்கள்.
உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கும் அபத்தத்தை விட, படைத்தவனின் உருவாக்கத்திற்கு அதிக கவனம் கொடுப்பது மிகவும் முக்கியமானது.
ஒரு மனிதரானவர் ஒரு விதையைப் போன்றவர். ஒன்று, நீங்கள் இருக்கும் நிலையிலேயே இருக்கலாம், அல்லது மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு அற்புதமான மரமாக உங்களை நீங்களே வளர்த்துக்கொள்ளலாம்.
அன்பென்பது ஒரு பரிவர்த்தனை அல்ல, அது உங்களுக்குள் எரியும் ஒரு தீச்சுடர். அது உங்கள் மையத்தையே எரிக்கும்போது, விடுதலையாக இருக்கிறது.
நீங்கள் கவலைப்படும்போது இயங்குவதை விட, நீங்கள் உற்சாகமாகவும் ஆனந்தமாகவும் அற்புதமாகவும் இருக்கும்போது உங்கள் நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாக இயங்கும். உயிரின் முழுமை நிலைதான் ஆரோக்கியம்.