வாழ்க்கை கவிதைகள் (Life Poems in Tamil)

ஒரு நாள்... ஒரு வாழ்க்கை

பறவைகள் கீச்சிடும்
பரவசமாய் ஏதோ பற்றி

உயர்ந்ததாய் நோக்கமில்லை
உரையாடலின் பொருளிலே

கீச்சுக்கள் எல்லாம்
குருணை பற்றியோ
பூச்சி பற்றியோ
பருவநிலை பற்றியோ...

கீச்சு, கரணம், இனப்பெருக்கம் -
மரணம் வரை இதை செய்திருக்க
மனநிறைவு கொள்வாயா?

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil

வாழ்வின் பரிவர்த்தனைகள்

வண்ணங்கள் பலவற்றை மரங்கள் புனைய
வருகின்ற மரணத்துக்கான
வண்ணமயமான கொண்டாட்டம் அது.
பழுப்பு இலை கீழே சென்று
பூமியை செறிவூட்ட
மரத்துக்கு தான் கொடுத்த சத்தை
பூமி மீட்டெடுத்துக் கொள்கிறது
வாழ்வுக்கும் மரணத்துக்குமான பரிவர்த்தனைகள்
பொருள் உலகில் தொடர்ந்திருக்கும் சுழற்சிகள்
உயிரின் துடிப்புடன் வாழும்போது
ஒருவருக்கு அது மகிழ்வைத் தரும்.
தேவையான உவகை இழந்து
களைப்பே மேலோங்கினால் துயரமான
கவலையில் ஆழ்த்தும் மரணமாக மாறும்.
இலை விழட்டும்.
நேரம் வரும்போது மனமுவந்து வீழ்வதே மேன்மை.
இலையுதிர் காலத்தின் மேன்மையை உணர்ந்துகொள்.
வண்ணமயமான இலையை பற்றியதல்ல இது
உயிரைப் பற்றியது.

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil, Transactions of Life

வாழ்வின் சாரம் அதன்
நுட்பங்களில் உள்ளது.
நுட்பங்களின்றி போனால் வாழ்வு
உற்சாகமற்றுப் போகும்.

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil

வாழ்க்கையொரு கனவு
ஆனால், அக்கனவு மெய்யானது
இப்போது அது உன் கனவாய் இருப்பதால்
அதை நீதான் நிகழச்செய்ய வேண்டும்

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil, கனவு, Dream

முதுமையின் விவேகமும்
இளமையான உயிரின்
புத்தம் புதிதான தன்மையும் சக்தியும்
உயிர் மலர சிறந்த கலவை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil, முதுமை, இளமை

வாழ்வின் நடைக்கூடங்கள் உன்னை
ஒரே வட்டத்தை மீண்டும் மீண்டும்
சுற்றிவரச் செய்யலாம்
நீ நின்று நிதானித்து ஆழச் சிந்திக்கும் வரை

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil

வாழ்வு உள்ளது அதன் அர்த்தத்தில்
அன்பை அதன் அர்த்தமாக்க
அனைவரும் ஆவர் தேவர்களாய்
வெறுப்பிலோ
அனைவரும் ஆவர் அரக்கர்களாய்
சரியான அர்த்தத்தில்
உன்னையே பொருத்திவிடு
உன் வாழ்வின் அரசனாக நீ ஆகிவிடு

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil, அன்பு, வெறுப்பு

வாழ்க்கையொரு நாடகம்
நடிக்கத்தான் வேண்டும் நீ
மேடையிலிருந்து இறங்கவேண்டிய காலத்தையும்
கட்டாயம் அறிய வேண்டும் நீ

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Life Poems in Tamil, நாடகம், Drama

இன்றைய நாளைய தொழில்நுட்பங்கள்
வெறும் விளையாட்டு பொம்மைகளே
வாழ்விலேயே உயர்மதிப்பானது
உள்ளே இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு
விரும்பியதுபோல் விளையாடு

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Poem in Tamil About Life, தொழில்நுட்பம், Technology

பலவகையான அலைகள்
பல கொண்டது வாழ்வு
அதன் மேல் சவாரிசெய்யத் தெரிந்தால்
அது ஒரு வாய்ப்பு
அது உங்களை மூழ்கடித்துவிட்டால்
ஆகுமே இடர்ப்பாடு

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Poem in Tamil About Life, அலை, Wave

முகத்தில் உள்ள வரிகளை
கண்டுகொள்ள முடியும் - ஆனால்
வலிகளை இன்பங்களை
சந்தோஷங்களை துன்பங்களை
அனைத்துக்கும் மேலாக ஒருவரது
வாழ்வனுபவத்தின் ஆழத்தை
எவரால் அறிந்துகொள்ள முடியும்

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Poem in Tamil About Life, Life Experience

வாழ்வு

மிக அமைதியின்றி இருப்பவரும்
மிக்க அமைதி கொள்வார்
அவரின் உயிர் அவரை நீங்கும்போது -
ஒரே சாபம் உயிர்வாழ்வது தான் என்பது போல.

அன்பும் அருளும்,
சத்குரு

வாழ்க்கை கவிதைகள், Poem in Tamil About Life, Death

தொடர்புடைய பதிவுகள்:

சத்குருவின் கவிதைகள் தமிழில்

கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.

சத்குருவின் இயற்கை கவிதைகள்

இயற்கையின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அப்படி இருந்தாலும், ஒரு ஞானியின் கவிதைகள் இயற்கையின் விநோதங்களைப் பற்றிய முற்றிலும் புதிதான பார்வையை நமக்கு வழங்கவல்லது. இயற்கையைப் பற்றிய சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

சத்குருவின் பூமி கவிதைகள்

பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...